'சடலங்கள் தகனம் செய்யப்படுவதை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் நிராகரிப்பு'

banner

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.





பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்ணான்டோ மற்றும் பிரித்தி பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.





கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதை சவாலுக்கு உட்படுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உயிரிழந்த முஸ்லிம்களின் உறவினர்கள் உள்ளிட்ட 11 தரப்புகளால் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.