கொழும்பில் நேற்று மாத்திரம் 526 பேருக்கு கொரோனா
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 798 கொரோனா தொற்றாளர்களில் 526 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
அத்துடன், ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 604 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் நேற்றுவரை 206 தொற்றாளர்களும், கண்டி மாவட்டத்தில் 883 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கண்டியில் நேற்று மாத்திரம் 40 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
Related Posts