கிளிநொச்சியில் 'மரண வேட்டை' - கவலையில் மக்கள்!

banner

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உழவனூர் தம்பிராசாபுரம் காட்டுப்பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.





சுண்டிக்குளம் பறவைகள் சரணலாயத்திற்கு அருகில் உள்ள இந்த பிரதேசங்களில் அதிகளவு பறவைகள் காலத்திற்கு காலம் வந்து செல்கின்றன. குறிப்பாக நாரைகள் மற்றும் பெரிய வகை கொக்குகள் எனபன  இங்கு பருவகால பறவகைளாக வருகின்றன.
இவ்வாறு வருகின்ற பறவைகளையே சட்டவிரோதிகள் இரவில் வேட்டையாடுகின்றனர் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.





கொக்கு, மயில், மற்றும் விலங்குகளும் சுடப்படுகின்ற துப்பாக்கிச் சத்தங்கள், கேட்பதோடு, பறவைகள் விலங்குகளின் அவல சத்தங்களும் கேட்பதாக பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.





கடந்த காலங்களில் அதிகளவில் தங்கள் பிரதேசங்களுக்கும் அங்குள்ள சிறிய நீர் நிலைகளை நோக்கியும் அதிகளவில் பறவைகள் வந்து சென்றன. ஆனால் தற்போது அவை மிகவும் குறைந்து விட்டது எனவும் வருகின்ற ஒரு சில பறவைகளையும்வேட்டையாடி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.





எனவே உரிய தரப்பினர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு எஞ்சியிருகின்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்குமாறும் பிரதேச பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்