'உண்மையை சொன்னேன், உள்ளே போகின்றேன்' - ரஞ்சன்

banner

” கொள்ளையடிக்கவில்லை, குடு விற்பனை செய்யவில்லை. உண்மையை பேசிவிட்டே உள்ளே செல்கின்றேன். அனைவருக்கும் கடவுள் துணை…….”





இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.





நீதிமன்ற வளாகத்திலிருந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றப்படும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருடகால கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.





நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காகவே 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.