யாழில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

banner

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





குறித்த சம்பவத்தில் பொம்மைவெளியைச் சேர்ந்த ஆணொருவர்,(35 வயது) ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.





அதேபோன்று பொம்மைவெளி 8ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த பெண்ணொருவர் (33 வயது), 5 கிராம் 750 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் 80 ஆயிரம் ரூபாய் பணத்துடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.





நேற்று (திங்கட்கிழமை) நண்பகல் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை, யாழில் பல்வேறு இடங்களில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டது.





இதன்போதே குறித்த இரு சந்தேகநபர்களையும் கைது செய்து, மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்ற பொலிஸார், யாழ்.நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.