யாழில் எகிறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

banner

யாழ். மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 42 பேருக்கும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், காங்கேசன்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேருக்கும், மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.





யாழ். மாவட்டத்தில் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 10 இற்கு குறைவான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.