வாழவரம் கேட்ட மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை

banner

மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தங்குவதற்கு வீட்டில் அறையொன்றைகோரிய மகனை அவரின் தந்தையும், சகோதரியின் கணவரும் அடித்து படுகொலை செய்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கண்டி – ஹசலக பகுதியில் இடம்பெற்றுள்ளது.





இரு பிள்ளைகளின் தந்தையான சுனில் நிஷாந்த என்ற 28 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.





நிரந்தர தொழில் எதுவுமில்லாததால் கூலிவேலை செய்தே சுனில் தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். தனது பெற்றோரின் வீட்டில் பின்பகுதியில் இவர்களுக்காக அறையொன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அதில்தான் வசித்துவந்துள்ளனர்.





மூன்று வாரங்களுக்கு முன்னர் சுனிலின் மனைவிக்கு மற்றுமொரு குழந்தை பிறந்துள்ளது. எனவே, அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு வீட்டினுள் அறையொன்றை கோரியுள்ளார். இதனை அடிப்படையாக வைத்தே கடந்த 6 ஆம் திகதி மோதல் இடம்பெற்றுள்ளது.





இதன்போது சுனிலின் தந்தையும் மச்சானும் இணைந்து அவரை கடுமையாக தாக்கினர் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.





படுகாயமடைந்த சுனில் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.





இதனையடுத்து அவரின் சடலம் ஊருக்கு கொண்டுவரப்பட்டது. பிரதேச வாசிகள் உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. ஊரிலுள்ள பிரஜா நிலையத்தில் வைத்து இறுதி சடங்கி நடத்தினர்.





இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.