'கிழக்கிலும் கரையொதுங்கும் சடலம்'

banner

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது.





இன்று (08) காலை கரைவலை மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது மீனவர்களின் வலையில் சடலம் சிக்கியுள்ளது.





பின்னர் மீனவர்கள் சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.





சடலம் தொடர்பான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்து​ வருகின்றனர்.





வடக்கின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக சடலங்கள் ஒதுங்கும் சம்பவங்கள் பதிவாகிய நிலையிலேயே இன்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.





கடந்த இரண்டு வார காலத்தில் வடக்கின் பல பகுதிகளில் கடற்கரைகளில் 6 சடலங்கள் கரையொதுங்கியிருந்தன.