சட்ட போராட்டத்திலும் வென்றார் நொவக் ஜோகோவிச்

banner

முன்னணி டெனிஸ் வீரரான நொவக் ஜோகோவிச்சின் விஸாவை இரத்து செய்வதற்கு அதிகாரிகள் எடுத்த முடிவு முறையற்றது என ஆஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





உலகின் ‘நம்பர் வன்’ டென்னிஸ் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்ற சாதனையாளருமான செர்பியாவின் நொவக் ஜோகோவிச் மருத்துவ விதிவிலக்குக்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படைஅதிகாரிகள் அவரது விசாவை தடாலடியாக இரத்து செய்து, நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுத்தனர்.





முதலில், மருத்துவச்சான்றிதழ் கொண்டுவருவதிலிருந்து அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்ட நிலையில், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படை தன்மையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்தது.





இந்த நிலையில், அவரை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதா அல்லது ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிப்பதா என்பது குறித்து மெல்போர்ணில் உள்ள பெடரல் நீதிமன்றம் இன்று விசாரித்தது. அந்த அடிப்படையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.