கிளிநொச்சியில் தாயும், மகளும் சடலங்களாக மீட்பு

banner

கிளிநொச்சி – தர்மபுரம், புன்னைநீராவி பகுதியில் தாயும் மகளும் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.





இன்று (21) மாலை சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.





வீடு தீப்பற்றியதால் இவர்கள் உயிரிழந்தனரா, அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.





தர்மபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.