இந்து வர்த்தகர் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் பயங்கரம்!

banner

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் சிந்து மாகாணத்தின் தகரி நகரத்தில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.





சுட்டுக்கொல்லப்பட்டவர் சதன்லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற அண்மைய வன்முறை சம்பவம் இது.
கடந்த ஜனவரி 4ம் திகதி சுனில்குமார் என்ற வர்த்தகரும் சிந்து மாகாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இவர் ஒரு தொழிலதிபர்.





பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நான்கு வன்முறைச்சமபவங்கள் அண்மையில் பதிவாகியுள்ளதாக செய்தி ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.





ஜனவரி 30ம் திகதி கிறிஸ்தவ மதகுரு ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தார். முன்னதாக குருநானக்கின் பிறந்த நாளன்று ஐந்தாம் வகுப்பில் கல்வி பயிலும் 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பின் கொலை செய்யப்பட்ட சம்பவமும் இதே பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.