'போர் பதற்றம் உக்கிரம்' - உக்ரேனுக்கான விமான சேவைகள் இரத்து

banner

விமானசேவை நிறுவனங்கள் சில உக்ரேனுக்கான விமானசேவைகளை இரத்துசெய்துள்ளன.  வேறு சில நிறுவனங்கள்  உக்ரேனுக்கான விமானசேவைகளை திசை திருப்பியுள்ளன. ரஷ்யா எந்நேரமும் உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாலேயே விமானசேவை நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.





டச்சு KLM விமானசேவை உக்ரேனுக்கான தனது சேவைகளை நிறுத்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது. உக்ரேன் வான் பரப்பில் பறப்பது விமானங்கள் ஆபத்தானது என KLM விமானசேவை கருதுகிறது.





2014ம் ஆண்டு ரஷ்ய ஆதரவு உக்ரேன் தீவிரவாதிகள் மலேசிய விமானசேவை நிறுவனத்திற்குச்சொந்தமான விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மொத்தம் 298 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 198 பேர் டச்சு பிரஜைகள்.





 சனிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குமிடையே ஒரு மணித்தியாலத்திற்கு மேல் நீடித்த தொலைபேசி உரையாடலிலும் எதுவித சாதகமான முடிவுகளும் எட்டப்படவில்லை.





ரஷ்யா துருப்புகளை உக்ரேன் எல்லையில் நிறுத்தியுள்ளதுடன் பெலாரஸில் வைத்து பயிற்சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. உக்ரேனை ஆக்கிரமிக்கும் நோக்க்கம் தனக்கு இல்லையென ரஷ்யா கூறுகிறது. ஆனால் அமெரிக்க உளவுச்சேவை ரஷ்யா குறுகிய கால அறிவித்தலில் உக்ரேன் மீது தாக்குதல் தொடுக்கும் என தெரிவித்துள்ளது.