தந்தை பின்னால் சென்ற மகன் குழிக்குள் விழுந்து பலி!

banner

வீட்டில் வளர்க்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு தந்தை அழைத்துச் சென்றபோது, அவரின் பின்னால் சென்ற 3 வயது சிறுவன் தண்ணீர் குழிக்குள் விழுந்து பலியாகியுள்ளார்.





கஹட்டகஸ்திலிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் முஹம்மட் அஸ்கார் என்ற 3 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.





காலஞ்சென்ற சிறுவனின் தந்தை வழமைபோல் வீட்டில் வளர்க்கும் மாடுகளை வீட்டுக்குப் பின்னாலு ள்ள காட்டுப் பிரதேசத்துக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.





தந்தையின் பின்னால் இந்த சிறுவனும் சென்றுள்ளார். சிறுவன் வருவதை தந்தை கவனிக்கவில்லை என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு சென்ற சிறுவன் தண்ணீர் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்து இறந்து உள்ளார்.





பின்னர் சிறுவனை காணவில்லை என வீட்டார் தேடியபோது தண்ணீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து உயிரிழந்ந்தது தெரியவந்துள்ளது.