தந்தையும், மகனும் பலி - புத்தாண்டில் சோகம்

banner

பட்டதுவையிள்ள பிரபலமான தொழிற்சாலையொன்றின் தண்ணீர் தாங்கியில் விழுந்து இருவர் பலியாகியுள்ளனர்.





அக்மீமன தல்கம்பல பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.





புதுவருட விடுமுறைக்காக தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் மாறி மாறி வந்து தொழிற்சாலையை ஆய்வு செய்வது வழக்கம்.





நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரிகள் சிலருக்கு இந்தக் கடமை ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்றைய தினம் உயிரிழந்த அதிகாரி தொழிற்சாலைக்கு வந்துள்ளார்.





அந்த அதிகாரி நேற்று வந்தபோது அவரது 9 வயது மகனும் அவருடன் வந்துள்ளார். காலை 10.30 மணிக்கு தொழிற்சாலைக்குள் நுழைந்த அந்த அதிகாரியும் மகனும் 2.00 மணியாகியும் வெளியே வராத காரணத்தால் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் தேடிப் பார்த்தபோது இயந்திரங்களை குளிர்விக்க தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் தண்ணீர்த்தாங்கியில் விழுந்து தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.





பின்னர் அவர்களை தண்ணீர்த்தாங்கியிலிருந்து வெளியே எடுத்து கராபிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றபோது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.