யுவதியுடன் செல்பி எடுக்க முற்பட்ட மூவர் கைது

banner

அயர்லாந்து யுவதி ஒருவரின் கையைப்பிடித்து செல்பி புகைப்படம் எடுக்க வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக, கடந்த (24) மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.





கண்டியில் நடந்த மேற்படி சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்களும் வெளியாகியிருந்தன. இந்த வீடியோவையடுத்தே,மேற்படி இம்மூன்று இளைஞர்களும் சந்தேகத்தில் கைதாகினர்.





கண்டிக்கு கடந்த (06) விஜயம் செய்த மேற்படி யுவதியும்,ஜேர்மன் நாட்டு இளைஞரும் நகர வீதியில் வந்தபோதே, இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.





பாலியல் தொல்லை மேற்கொண்டதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று இளைஞர்களும், கட்டுகாஸ்தோட்டை மற்றும் மெதவல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலாப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.