'புலிகள் மீள உருவாக்கம்'? - தமிழகத்தில் தேடுதல் வேட்டை

banner

இலங்கையிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயுத மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில்,இந்திய தேசிய புலனாய்வுத்துறையினர் நேற்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.





இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை மீண்டும் புதுபிக்கும் நோக்கில் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தேசிய புலனாய்வுத்துறை சந்தேகிக்கிறது.





இதன் அடிப்படையில் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர் குணா என்ற குணசேகரன், புஸ்பராஜ், பூக்குடி கண்ணா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஆயுதக் கடத்தல்காரரான ஹாஜி சலீம் ஆகியோருடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டிலேயே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





இந்த தேடுதலின்போது ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக என்ஐஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.