பொலிஸார் - கொள்ளையர்களுக்கிடையே துப்பாக்கிச் சமர் - பறிபோனது யுவதியின் உயிர்!

banner
மீரிகம, ,தங்ஓவிட்ட சந்தியிலுள்ள மதுபான கடையை கொள்ளையிட வந்த கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் சிக்கி பஸ்ஸில் பயணம் செய்த பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

மதுபான கடையை கொள்ளையிட கொள்ளையர்கள் முயற்சிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் அந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்டதும் கலவரமுற்ற கொள்ளையர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, பொலிஸார் திருப்பிச் சுட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவ்வழியாகச் சென்ற பஸ் வண்டியொன்றின் கடைசி ஆசனத்தில் அமர்ந்திருந்த 29 வயதான பெண் மீது துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளன.

அப்பெண்ணை உடனடியாக வத்துபிட்டிவல வைத்திய சாலையில் சேர்த்து பின்னர் அவர் உயிரிழந்து ள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.