இலங்கையில் நாளாந்தம் 12 பேருக்கு மார்பகப் புற்றுநோய்!

banner
நாட்டில் நாளாந்தம் 12 பேர் வரையில் மார்பகப் புற்றுநோயுடன் அடையாளங்காணப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2 தசாப்த காலங்களாக நாட்டில் மார்பகப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக விசேட வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பொதுமக்களுக்கு தௌிவூட்டும் வேலைத்திட்டங்கள் நேற்று(01) முதல் இம்மாதம் முழுவதும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.