பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இரு பெண்கள் கைது!

banner
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இரு பெண்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவயில் பிரபல பாடசாலையொன்றுக்கு அருகே நின்றுகொண்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 29 வயதானவர்கள் எனவும், அவர்களிடமிருந்து 8 கிராம் 229 மில்லி கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.