பிக்குவாக வந்து இலங்கை யுவதியை கரம்பிடித்த பங்களாதேஷ் பிரஜை கைது!

banner
கல்வி கற்பதற்காக பௌத்த பிக்குவாக இலங்கை வந்த பங்களாதேஷ் பிரஜையொருவர், பேஸ்புக் மூலம் அறிமுகமான யுவதியொருவரை காதலித்து காவி உடையை களைந்து காதலியுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது மஹியங்கன பொலிஸாரா கைது செய்யப்பட்டுள்ளார்.

மணிக் பருவா என்ற 31 வயதான பங்களாதேஷ் நாட்டவர், விசா முடிந்த நிலையில்கூட, தொடர்ந்தும் இலங்கையிலேயே தங்கி வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.