களுத்துறை மாவட்டத்திலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவில் 4 கிராம சேவகர் பிரிவுகளும், பாலிந்த நுவர பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவில் கொரக்கொட, பேரகம, தாபிலிகொட, கெகுலாந்தர வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலும், பாலிந்த நுவர பிரதேச செயலாளர் பிரிவு பெல்லன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
Related Posts