மு.கா. எம்.பிக்களின் ஆதரவுடன் 20 நிறைவேற்றம்!
20 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்தான இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்டையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 156 பேரும், எதிராக 65 பேரும் வாக்களித்தனர். மைத்திரிபால சிறிசேனவும், விஜயதாச ராஜபக்சவும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர் ஆதரித்து வாக்களித்த அதேவேளை ரிஷாட் பதியுதீன் '20' இற்கு எதிராக வாக்களித்தார்.
தற்போது குழுநிலை விவாதம் இடம்பெற்றுவருகின்றது. திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.
Related Posts