மாகாண தேர்தலில் ரெலோ தனிவழி?

banner

மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணியாகவே களமிறங்குவோம் என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (25) தெரிவித்தார்.





மாகாணசபைத் தேர்தலில் ரெலோ தனித்து போட்டியிடுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.





" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதில் எமக்கும் பங்கியிருக்கின்றது. அது மக்களுக்காக உருவான கூட்டணி. மாகாணசபைத் தேர்தலில் அந்த கூட்டணியில்தான் போட்டியிடுவோம். எனினும், கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கவேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.





நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட வடக்கு மாகாணசபையும் ஒரு காரணமாக அமைந்தது. ஆகவே, தவறுகள் மற்றும் குறைகளை திருத்திற்கொண்டு முன்நோக்கி பயணிக்கவேண்டும்." - என்றும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.