'இராவணன் யுகம் குறித்து ஆழமாக ஆராயுமாறு கோரிக்கை'

banner

இலங்கையில் இராவணன் யுகம் தொடர்பில் ஆழமாக ஆராயப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரிக்கை விடுத்தார்.





நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" இலங்கையின் மரபுரிமை, கலாச்சாரம் தொடர்பில் பலரும் பல கோணங்களில் கருத்துகளை வெளியிடுகின்றனர். விஜயனின் வருகையின் பின்னரே கலாச்சார உரிமைகள் ஆரம்பமாகின என்று கூறப்படுகின்றது. இதில் மாறுபட்ட கருத்துகளை உடையவர்களும் இருக்கின்றன. இவை தொடர்பில் ஆராயவேண்டும்.





அதேபோல இராவணனின் வரலாறு தொடர்பிலும் ஆராய வேண்டும். அவ்வாறு ஆராயாமல் இராவணன் என்பது கற்பனை என தொல்லியல் திணைக்களம் கூறுவதை ஏற்கமுடியாது. தொல்லியல் ஆய்வில்ஈடுபட விரும்பும் பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக்கொண்டு இதற்கான பணியில் ஈடுபடவேண்டும். " - என்றார்.