சம்பந்தன், ரணில் விரைவில் சந்திப்பு

banner

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது முக்கியமான சந்திப்புகளில் ஈடுபட்டுவருகின்றார்.





பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் சிறிதுகாலம் ஓய்வில் இருந்த அவர் புத்தகம் எழுதும் பணியில் முழுவீச்சுடன் இறங்கினார். இந்நிலையில் தற்போது ஆன்மீகத் தலைவர்களை சந்தித்து ஆசிபெற்று, அரசியல் சார்ந்த கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுவருகின்றார்.





இதன்படி ராஜபக்சக்களுக்கு மிகவும் நெருக்கமான தேரர்களுள் ஒருவரான முருத்தெட்டுவே ஆனந்த தேரரை அண்மையில் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, மனம்விட்டு பல விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாகவும், தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து விளக்கமளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





ஆன்மீக தலைவர்களை சந்தித்த பின்னர் வெளிநாட்டு தூதுவர்களையும், முக்கியமான சில அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.





இதற்கமையவே ரணில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவை சந்திக்கவுள்ளதாக சிறிகொத்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.