அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கையில் இருந்து பறந்த வாழ்த்துகள்

banner

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக கடமையேற்றுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.





அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் உப ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் நேற்று பதவியேற்றனர்.





இந்த நிலையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ஷ, தானும் தனது அரசாங்கமும் ஒரு வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.





அதேவேளை, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.





இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜாந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.





எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.