மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு - திடுக்கிடும் தகவல் வெளியானது

banner

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் சாரதியொருவர் பலியாகியுள்ளார்.





உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் சில நாட்களின் முன்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக்கொண்டே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.





துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.





இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவ்வழியாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் சாரதிமீதே சூடு நடத்தியுள்ளார்.





இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் அவரது வீட்டில் இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.