சஜித்தை அவசரமாக சந்தித்தார் சீனத் தூதுவர்
இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்துவம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை, சீன உறவு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கும் தற்போதைய கடன் நெருக்கடியை நிர்வகிப்பதற்குத் தேவையான ஆதரவையும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Posts