'தமிழ்க் கட்சிகளின் கூட்டு' - ரஜினியின் பாஷையில் பதிலடி கொடுத்த டக்ளஸ்

banner

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவால் அரசுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை - என்று ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.





கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.





இதற்கு பதிலளித்த அவர்,





" ரஜினியின் பாஷையில் கூறுவதாக இருந்தால் ஜுஜுபி. அதாவது எவ்வித நெருக்கடியும் இல்லை. அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் சேர்வதும், பிரிவதும் வழமை. மாகாணசபை முறைமை பற்றி நாம் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றோம். ஆனால் 13 விவகாரத்தில்கூட இவர்கள் மத்தியில் இணக்கப்பாடு இல்லை." - என்றார் அமைச்சர் டக்ளஸ்.