'13' சதி முயற்சியை முறியடிக்க அழைப்பு!

banner

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை 13 ஆம் திருத்தத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க, அனைத்து தமிழ் மக்களும் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்கு, கிழக்கில் செயற்படும் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து பாரத பிரதமரிடம் கையளிப்பதற்காக கூட்டு ஆவணமொன்றை தயாரித்தன. அது தற்போது இந்தியத் தூதுவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.





அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த ஆவணத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.





இந்நிலையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.