வடகொரியாவில் ஒமெக்ரோன் தொற்றுத் தீவிரம்!

banner

உலகுடனான வெளித் தொடர்புகள் ஏதும் இன்றித் தனித்து மூடப்பட்டிருந்த வடகொரிய நாட்டிலும் கொரோனா வைரஸ் அலை அடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்துப் பல ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்திக் கொண்டி ருந்த சமயத்தில் நாட்டுக்குள் பல லட்சம் பேர் காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.





நாட்டின் அரச தொலைக்காட்சி வெள்ளி யன்று வெளியிட்ட தகவலில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஆறு பேர்
உயிரிழந்தனர் என்றும் அவர்களில் ஒருவர் ஒமெக்ரோன் திரிபுத் தொற்றுக்கு இலக்காகியமை உறுதிப்படுத்தப்பட்டது
என்றும் அறிவித்தது. உயிரிழந்தவர்களது எண்ணிக்கை பின்னர் 27 ஆக உயர்ந்துள்ளது.





கோவிட் வைரஸின் எதிர்பாராத இந்தப் பரவல் நாட்டுக்குப் "பேரனர்த்தம்" என்று அந்நாட்டின் இளம் அதிபர் கிம் ஜொங் உன் (Kim Jong-un) அவசர கூட்டம் ஒன்றுக் குப் பின்னர் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார் என்று செய்திகள்
வெளியாகியுள்ளன.





தொலைக்காட்சியில் அவர் மாஸ்க் அணிந்து காணப்பட்டார். 25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வட கொரியாவில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ள சுகாதாரம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகள் பெரும்
தொற்றுநோய்ப் பரவலைத் தாக்குப் பிடிக்கமாட்டா என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





உலகில் வைரஸ் பரவித் தாண்டவமாடிய கடந்த இரண்டு ஆண்டுகாலம் எல்லை களை இறுக்கி மூடிய வடகொரியா நாட்டில் எவருமே தொற்றுக்கு இலக்காகவில்லை என்று கூறிவந்தது. சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தடுப்பூசிகளை அந்நாடு ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. தற்சம யம் சுமார் ஐந்து லட்சம் பேர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். சில காலத்துக்கு முன்னரே அங்கு வைரஸ் புகுந்து விட்டது என்பதையே தற்போ
தைய நிலைவரம் காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.





பொது முடக்கம் மற்றும் தனிமைப்படுத் தல் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு ள்ளன. வடகொரியாவுக்கு அவசர உதவி
களை வழங்கத் தயார் என்று தென் கொரியா அறிவித்திருக்கிறது.





-பாரிஸிலிருந்து குமாரதாஸன்-