மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

banner

2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.





இந்த வருடத்திற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.





இதேவேளை, 2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.