ஆபத்துக்கு இலங்கையை உதாரணம் காட்டிய IMF
எந்தவொரு நாடும் தாங்க முடியாதளவுக்கு கடன் பெற்றுக் கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் இலங்கையாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிரிஸ்டாலினா ஜோகிவா தெரிவித்துள்ளார்.
தாங்க முடியாத அளவுக்கு நாடொன்று கடன் பெற்றால் ஏற்படும் அரசியல் நெருக்கடியும் இதன் மூலம் தெளிவாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற G-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்காக நடைபெற்ற கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related Posts