ஐ.நா. ஆணையரின் கருத்தால் கடும் சீற்றத்தில் இலங்கை

banner

“இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தருணத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஏன் கூறினார் என்பது தொடர்பில் ஆராய்கின்றோம்.”





– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.





இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் கோரிக்கை விடுத்திருந்தார். அது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.





அவர் மேலும் தெரிவித்ததாவது:-





“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிவிப்பு தொடர்பில் அரசு கவனம் செலுத்தும். நாடு பல துறைகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் ஏன் இந்த அறிவிப்பு வந்தது என்பது தொடர்பில் ஆராய்வோம். இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை மட்டத்தில் ஆராயப்படும். அதன்பின்னர் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ பதிலை வெளியிடுவோம்” – என்றார்.