பிரிட்டன் சென்ற 10 இலங்கை வீரர்கள் மாயம்!
பொது நாலவாய விளையாட்டு போட்டிகளுக்காக பிரிட்டன் சென்றுள்ள இலங்கை வீரர்கள் ஒன்பது பேர் உட்பட 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிரிட்டனில் தஞ்சமடையும் நோக்கில் அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு காணாமல் போனவர்களில் 9 வீரர்களும், ஒரு முகாமையாளரும் அடங்குகின்றனர்.
தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு இலங்கையர்கள் தப்பி சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னர் காணாமல் போனவர்களை பொலிஸார் கண்டுபிடித்த போதிலும், அவர்களுக்கு 6 மாத விஸா அனுமதி இருக்கின்றமையினால், அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts