3 விடயங்கள் குறித்து கழுகுப் பார்வை அவசியம்!
மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் நேரில் வலியுறுத்தியுள்ளது.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் தொடர்பான விடயங்கள் அவற்றில் உள்ளன என்று நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அரசு விசேட கவனம் செலுத்தி நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது எனக் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் வெளியிட்டுள்ள ‘ருவிட்டர்’ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துப்படி, சிவில் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பு, பேச்சு சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்பவை தொடர்பிலும் பிரதிநிதிகள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
Related Posts