ஜனாதிபதி ரணிலின் நாடகத்தை அம்பலப்படுத்தும் அநுர!

banner
" சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் நாடகமே தேசியப் பேரவையாகும். அரசியல் நோக்கம் கொண்ட அந்த பேரவை பயனற்றதாகும்." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. மறுபுறத்தில் தனக்கு தேவையான அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் தேசியப் பேரவை எதற்கு? பெயரளவில் மட்டுமே அது இருக்கப்போகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. தற்போதைய அரசாங்கமும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றனர். எனவே, சர்வதேச மட்டத்தில் எழும் அழுத்தங்களை சமாளிப்பதற்காகவே ஆளுங்கட்சி தேசிய பேரவையை பயன்படுத்த முயற்சிக்கின்றது." - என்றார்.