சு.கவை அழிக்க நினைத்தால் அழிந்தே போவார்கள் - சாபமிடுகிறார் தயாசிறி

banner
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வீழ்த்த முயற்சிப்போர், இறுதியில் அரசியல் ரீதியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதே வரலாறு. ராஜபக்சக்களுக்கு நேர்ந்த கதி இதற்கு சான்றாகும் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், 1956 இற்கு பின்னர், 2 ஆவது விடுதலைப் போராட்டம் சுதந்திரக்கட்சி தலைமையிலேயே ஆரம்பமாகும் எனவும் அவர் சூளுரைத்தார்.

அதேவேளை, ஆட்சியைக் கைப்பற்றும் சக்தியாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் பலமடையும் எனவும் தயாசிறி நம்பிக்கை வெளியிட்டார்.