22 குறித்து இன்று விவாதம் ஆரம்பம் - ஜனாதிபதியும் விசேட உரை

banner
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற ஆலோசனை தெரிவுக்குழு கூடிய போது 22ஆவது திருத்தத்தை விவாதிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

அதேபோல கோப்(COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கான புதிய தலைவரும் இன்று(06) தெரிவு செய்யப்படவுள்ளார்.